7ம் நாள் நடைபெற்ற சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடரில் சீன வெளியுறவு அமைச்சர் யாங் சியேச்சு சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். 2010ம் ஆண்டு சீனா பன்முகத் தூதாண்மையை தொடர்ந்து முன்னேற்றும் எனவும், உலகின் பல்வேறு நாடுகளுடன் இணைந்து ஒன்று மற்ற தரப்பிடம் கற்றுக்கொண்டு, கூட்டாக வளர்ச்சியடைய விரும்புவதாகவும், உலகம் மற்றும் பிரதேசத்தின் அமைதி, நிதானம், வளர்ச்சி ஆகியவற்றுக்காக இயன்ற அளவில் பங்காற்றுமென, அவர் தெரிவித்தார்.
சுமார் 2 மணி நேர செய்தியாளர் கூட்டத்தில், இவ்வாண்டு சீனாவின் தூதாண்மை பணிகளின் முக்கிய கடமை, சீன-அமெரி்க்க உறவு, சீன-ரஷிய உறவு உள்ளிட்ட இரு தரப்புறவு, 20நாடுகள் குழுவின் உச்சி மாநாடு, கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினைகள் ஆகிய பல தரப்பு விவகாரங்கள், மற்றும் பிரதேசப் பிரச்சினை பற்றி செய்தியளர்களின் கேள்விகளுக்கு யாங் சியேச்சு பதில் அளித்தார்.
2010ம் ஆண்டு, தொடர்ந்து உலக நிதி நெருக்கடியைச் சமாளித்து, உலகப் பொருளாதார மீட்சியை முன்னேற்றுவதற்கான மிக முக்கிய ஆண்டு ஆகும். அரசுரிமை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியுரிமையை பேணிக்காக்கும் அடிப்படையில், சீனா பன்முகத் தூதாண்மையை முன்னேற்றும். இது குறித்து, யாங் சியேச்சு மேலும் கூறியதாவது
குறிப்பாக, இவ்வாண்டு உச்சிமாநாடு மற்றும் உலகப் பொருட்காட்சி தொடர்பான தூதாண்மைப் பணிகள் செவ்வனே செய்யப்படும். அதேவேளை, நாட்டின் நிதானம், வளர்ச்சி, பொருளாதார கட்டமைப்பின் சரிப்படுத்தல் ஆகியவற்றுக்கு, சிறந்த சூழல் உருவாக்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.
உலகப் பொருட்காட்சி வளரும் நாடுகளில் நடைபெறுவது இதுவே முதல்முறை. இது, சமூகம், பொருளாதாரம், , அறிவியல் தொழில் நுட்பம், மானிடவியல் ஆகிய துறைகளிலான ஒரு மாநாடாகவும், ஒரு தலைசிறந்த தூதாண்மை மாநாடும், உலக மற்றும் பல்வேறு நாடுகளின் மக்களிடமிலிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பாகவும் இது அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சீன-அமெரி்க்க உறவு பற்றி, தைவானுக்கான ஆயுத விற்பனை, அமெரிக்க தலைவர் தலாய் லாமாவுடன் சந்தித்தது உள்ளிட்ட அமெரிக்கா அண்மையில் மேற்கொண்ட செயல்கள், சீனாவின் மைய நலன்களையும் இரு நாட்டுறவின் ஒட்டுமொத்த நிலையையும் பாதித்தன என்று யாங் சியேச்சு சுட்டிக்காட்டினார். அவர் இது பற்றி பேசிய போது
சீனாவின் நிலைப்பாட்டை உணர்வுப்பூர்வமாக கையாண்டு, சீனாவின் மைய நலன் மற்றும் முக்கிய கவனத்தை மதித்து, இரு நாட்டுறவின் மீட்சி, நிதானம், வளர்ச்சி ஆகியவற்றை முன்னேற்றுவது, அமெரிக்காவின் உடனடி கடமையாகும் என்றார் யாங் ச்சியேச்சு.