சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் உறுப்பினரும், சீன Wu Kuang குழுமத்தின் தலைமை இயக்குனருமான Zhou Zhong Shu இது தொடர்பாக தமது யோசனையை முன்வைத்தார். அவர் கூறியதாவது:
"நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, பாரம்பரியத் தொழில்களைச் சீராக்க வேண்டும். சந்தை நுழைவு அனுமதி வழங்கும் வரையறை மற்றும் தொழில் நுட்ப வரையறையை உயர்த்தி, பாரம்பரியத் தொழில்கள் மற்றும் அடிப்படை தொழில்களை புதுப்பிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சீனாவின் பாரம்பரியத் தொழில்கள்களுக்கு, சர்வதேச அளவிலான மேம்பட்ட தகுநிலையை உருவாக்கி, சீனாவின் பொருளாதார நலன்களைப் பேணிக்காத்து, விரிவாக்குவதற்கு கவனம் செலுத்த வேண்டும்" என்று அவர் கூறினார்.
கரி குறைந்தப் பொருளாதாரத்தை வளர்ப்பது, தற்காலத்தில் சீனா பொருளாதார வளர்ச்சி முறையைச் சீராக்குவதற்கு தேவையானது என்று அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். தற்போதைய அரிய வரலாற்று வாய்ப்பை செவ்வனே பயன்படுத்தி, கரி குறைந்த தொழில் நுட்பங்களை ஆக்கப்பூர்வமாக வளர்த்து, பாரம்பரியத் தொழில்களைச் சீராக்கி, முன்பு மூலவளங்களின் பயன்பாடு, மாசுப் பொருட்களின் வெளியேற்றம் ஆகியவற்றைச் சார்ந்திருந்த வளர்ச்சி முறையை சீனா மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்த பிரச்சினைகளுக்கு சீன அரசு பெரிதும் முக்கியத்துவம் அளித்துள்ளது. சீனத் தலைமையமைச்சர் வென் சியாபாவ் அரசு பணியறிக்கையில் கூறியதாவது:
"பொருளாதார வளர்ச்சி முறையை மாற்றுவது, மிக அவசரமான கடமையாக இருக்கிறது. புத்தாக்கம் மூலம் தூண்டுதல், வெளிப்புற ஆற்றலைச் சார்ந்திராது இருத்தல், தொடர்ச்சியாக அதிகரித்தல் என்ற வளர்ச்சிப் பாதையில் பொருளாதாரம் நுழைவதை பெரிதும் தூண்ட வேண்டும். முக்கிய தொழில்களை தொடர்ந்து சீர்ப்படுத்தி, வளர்க்கவும், புதிய உத்திநோக்குத் தன்மை வாய்ந்த தொழில்களை உருவாக்கவும் தொடர்ந்து பாடுபடுவோம்" என்றார் வென்ச்சியாபாவ்.