தேசிய மக்கள் பேரவை ஆண்டு கூட்டத்தொடர்களின் ஹெநான் மாநிலத்தின் பிரதிநிதிக் குழுவின் கலந்தாய்வில் சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவ் 10ம் நாள் கலந்து கொண்டார். பல்வேறு தரப்புகள் ஊக்கத்துடன் செயல்பட்டு பொருளாதார வளர்ச்சி முறையின் மாற்றத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று ஹுசிந்தாவ் வலியுறுத்தினார்.
ஹெநான் மாநிலத்தின் பிரதிநிதிகள் பொருளாதார வளர்ச்சி முறையின் மாற்றம் குறித்து கருத்துக்களைத் தெரிவித்தனர்.
திட்டத்தின் வழிகாட்டலை வலுப்படுத்தி, உத்திநோக்குக் கடமைகளுக்கு முக்கியத்துவமளித்து, தற்போதைய மற்றும் எதிர்கால நலனை சமமாக கையாண்டு, பொருளாதார வளர்ச்சி முறையின் மாற்றத்தில் உண்மைப் பயன் பெறுவதை முன்னேற்ற வேண்டும். ஹூசிந்தாவ் பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கேட்ட பின் இவ்வாறு கூறினார்.