கடந்தக் குறுகியக் காலத்தில் சீனாவில் உணவுப் பொருள் உள்ளிட்ட சில வணிகப் பொருட்களின் விலை உயர்ந்தது. சமூகத்தின் பண வீக்கம் எதிர்பார்த்ததை விட அதிகரித்தது. இது குறித்து பெய்ஜிங்கில் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டு கூட்டத் தொடரில் கலந்து கொள்கின்ற மாநாட்டின் தேசிய கமிட்டியின் துணைத் தலைவரும் புகழ் பெற்ற பொருளியலாளருமான லீ வூ வேய் செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். சீனப் பொருளாதாரம் இயங்கிய நிலையை பார்த்தால் கடும் பண வீக்கம் ஏற்படாது என்று அவர் கூறினார்.
ஆனால் விலைவாசி உயர்வை குறிப்பிட்ட அளவில் கட்டுப்படுத்த வேண்டும். குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு உதவித் தொகையை வழங்க வேண்டும். இதன் மூலம் அவர்களின் வாழ்க்கை நிலை விலைவாசி உயர்வினால் பாதிக்கப்படுவதை தவிர்க்க உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று அவர் பேட்டியில் குறிப்பாக வலியுறுத்திக் கூறினார்.