தொடர்புடை சர்வதேச ஒப்பந்தங்களின் படி, வளரும் நாடான சீனா பசுங்கூட வாயு வெளியேற்றத்தை முன்முயற்சியுடன் குறைக்கும் நடவடிக்கை, சர்வதேச சரிப்பார்ப்புக்கு உட்படத் தேவையில்லை என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணைத் தலைவர் சியே செங்ஹுவா 10ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
வளரும் நாடுகளைப் பொறுத்தவரை, சர்வதேச நிதி மற்றும் தொழில் நுட்ப ஆதரவு பெற்ற பசுங்கூட வாயு வெளியேற்ற குறைப்பு நடவடிக்கைகள், சரிபார்க்கப்பட வேண்டும். ஆனால், சொந்த நிதித் தொகையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பசுங்கூட வாயு வெளியேற்றக் குறைப்பு திட்டப்பணிகள் சரிபார்க்கப்பட தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
காலநிலை மாற்றம் பற்றிய பேச்சுவார்த்தைக்கு சீனா பங்காற்றி வருகிறது. இப்பிரச்சினையில் சீனாவின் மனப்பான்மை எப்பொழுதும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் இருக்கிறது என்று சியே செங்ஹுவா வலியுறுத்தினார்.