2009ம் ஆண்டு சீனாவின் பல்வேறு நிலை நீதி மன்றங்கள், வெளிநாடுகளுடன் தொடர்புடைய மொத்தம் 11 ஆயிரம் பொது துறை வழக்குகளைக் கையாண்டன. இது 2008ம் ஆண்டில் இருந்ததை விட 16 விழுக்காடு அதிகமாகும் என்று சீன உச்ச மக்கள் நீதிமன்றத்தின் தலைவர் wang shengjun 11ம் நாள் பணியறிக்கையில் தெரிவித்தார்.
வெளிநாட்டுத் தேவை குறைவு, வெளிநாட்டு வர்த்தகச் சர்ச்சைகளின் அதிகரிப்பு முதலியவை குறித்து, உச்ச நீதி மன்றம் தொடர்புடைய சட்ட விளக்கங்களை வகுத்துள்ளது. சட்டப்படி சீனா மற்றும் வெளிநாடுகளின் தொடர்புடையவரது நலன்கள் பாதுகாக்கப்படும் என்று wang shengjun கூறினார்.