இப்போது, கான்சூ மாநிலத்தைச் சேர்ந்த Gannan பிரதேசத்தின் பொது மக்களும் துறவிகளும் நிதானத்தை தேடுகின்றனர். இங்குள்ள அடிப்படை வசதிகள் மற்றும் சிறப்பு வாய்ந்த தொழில்களுக்கு நடுவண் அரசு வழங்கிய ஆதரவின் அதிகரிப்புடன், இப்பிரதேசம் பாய்ச்சல் வளர்ச்சி கட்டத்தில் நுழைந்துள்ளது. தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியும் கான்சூ மாநிலத்தைச் சேர்ந்த Gannan திபெத் தன்னாட்சி சோவின் கட்சிக் கமிட்டித் தலைவருமான chen jianhua 11ம் நாள் இதைத் தெரிவித்தார்.
2008ம் ஆண்டு மார்ச் 14ம் நாள் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்திற்குப் பின், gannan பிரதேசம், நிதானத்தை நிலைநிறுத்திவருகிறது. பொது மக்களும் துறவிகளும், இணக்க வாழ்க்கையைக் குலைக்கும் நிலை தோன்றுவதை விரும்பவில்லை. தற்போது, சில உயர்வேக நெடுஞ்சாலைகள் கட்டியமைக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையமும் இவ்வாண்டில் கட்டப்படத் துவங்கும் என்றும் chen jianhua அறிமுகப்படுத்தினார்.