சீனத் தேசிய இடைக்கால மற்றும் நீண்டகால கல்விச் சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சித் திட்டம் பற்றிய பொது மக்களின் கருத்துக்களை கேட்டறியும் பணி பிப்ரவரி திங்கள் 28ம் நாள் துவங்கியது. முழு சமூகத்துக்கு கருத்துக்களை வெளிப்படையாக கேட்க துவங்கியது. கல்வி நியாயத்தை மேம்படுத்துவது சீனத் தேசிய அடிப்படைக் கல்விக் கொள்கையாகக் கொள்ள வேண்டும் என்பது இத் திட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது என்று சீன துணை கல்வி அமைச்சர் hao ping 12ம் நாள் பெய்சிங்கில் கூறினார்.
கல்வி வளத்தை நியாயமான முறையின் ஏற்பாடு செய்து, குறிப்பாக, கிராமப்புறம், வறிய மற்றும் சிறுபான்மை தேசிய இனங்களின் பிரதேசங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கட்டாய கல்வியின் சம வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்று hao ping கூறினார்.