ஓரளவு வசதியான சமூகத்தைப் பன்முகங்களிலும் கட்டியமைக்கும் போக்கில் செழுமையான நாட்டையும் வலிமையான படைகளையும் ஒன்றிணைப்பதை நனவாக்க வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஹுச்சிந்தாவ் கூறியுள்ளார். 12ம் நாள் பெய்ஜிங்கில் சீன தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடரில் சீன மக்கள் விடுதலைப் படைப் பிரதிநிதிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பு நிலைமையின் வளர்ச்சி மாற்றத்தைச் சரியாக அறிந்து கொள்ள வேண்டும். பன்னோக்கப் பாதுகாப்பு எண்ணத்தை உறுதியாக வலுப்படுத்த வேண்டும். அரசுரிமையையும் பாதுகாப்பையும் முதல் நிலையில் வைப்பதில் ஊன்றி நிற்க வேண்டும் என்று கூட்டத்தில் பிரதிநிதிகள் நிகழ்த்திய உரையை கேட்ட பின் அவர் மேலும் கூறினார்.