சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் மூன்றாவது கூட்டத் தொடர் 13ம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் நிறைவடைந்தது. ஹுச்சின்தாவ், வூப்பாங்கவோ, வென்ச்சியாபாவ், ஜியாச்சிங்லின் முதலிய கட்சி மற்றும் நாட்டுத் தலைவர்கள் நிறைவு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தேசிய கமிட்டித் தலைவர் ஜியாச்சிங்லின் நிறைவு கூட்டத்தில் உரைநிகழ்த்தினார். இவ்வாண்டுக்கான சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி இலக்கு, கடமை மற்றும் முக்கிய பணிகள் பற்றி கமிட்டியின் உறுப்பினர்கள் விவாதித்தனர் முக்கிய துறைகள் மற்றும் தீர்க்கமான பகுதிகளின் சீர்திருத்தம் வெளிநாட்டுத் திறப்புப் பணியை மேலும் விரிவாக்குவது முதலியவை பற்றி அவர்கள் விவேகமான ஆலோசனைகளை முன்வைத்தனர் என்று ஜியாச்சிங்லின் தம் உரையில் குறிப்பிட்டார். கூட்டத் தொடர் நடைபெற்ற வேளையில் மாநாட்டின் உறுப்பினர்கள் 760 உரைக் கட்டுரைகளையும் 5430 கருத்துருக்களையும் முன்வைத்தனர். சமூகம் மற்றும் மக்களின் கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 869 தவகல்களும் வழங்கப்பட்டன.
நிறைவு கூட்டத்தில் திரு He he hua சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் நிரந்தர கமிட்டியின் பணியறிக்கை, கருத்துருக்களைப் பரிசீலனை செய்வது பற்றிய அறிக்கை, நடப்பு கூட்டத் தொடரின் அரசியல் தீர்மானம் ஆகியவை நிறைவு கூட்டத்தில் வாக்கெடுப்பின் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டன.