அமெரிக்கா விற்பனை செய்த கடன் பத்திரம் அமெரிக்க நாட்டின் மதிப்பால் காப்புறுதியளிக்கப்பட்டது. முதலீட்டாளர்களின் கவலையை நீக்கும் வகையில் அமெரிக்கா உண்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது முதலீட்டாளர்களுக்கு மட்டுமல்ல அமெரிக்காவுக்கும் சாதகமாக துணை புரியும். சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் 14ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
சீனா மாபெரும் அந்நியச் செலாவணிக் கையிருப்புத் தொகை கொண்டுள்ளது. பாதுகாப்பு, புழக்கம், மதிப்பு அதிகரிப்பு ஆகியவை அந்நியச் செலாவணியை சேகரிப்பதற்கான முன்நிபந்தனைகளாகும். சர்வதேச நாணய விநியோக நாடான அமெரிக்காவில் நிகழ்ந்த பண மதிப்பு நிதானமின்மை சீனாவுக்கு மாபெரும் கவலையை ஏற்படுத்தியது. நாட்டின் நாணய கையிருப்பில் ஆபத்து எதுவும் நிலவுவதை அனுமதிக்கக் கூடாது. ஆகவே அமெரிக்கா உண்மையான நடவடிக்கைகளை மேற்கொண்டு முதலீட்டாளர்களின் கவலையை நீக்க வேண்டும் என்று வென்சியாபாவ் விருப்பம் தெரிவித்தார்.
தற்போது சீனா கொண்டுள்ள அமெரிக்க கடன் பத்திரத்தின் 75 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டியது. சீனா அமெரிக்க கடன் பத்திரங்களைக் கொண்ட இரண்டாவது பெரிய நாடாக விளங்குகின்றது.