வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் சீனாவில் தொழில் நடத்துவதற்கு சட்டரீதியில் நியாயமான சூழ்நிலையை சீனா உருவாக்கும். அவை சீனத் தொழில் நிறுவனங்களைப் போல் அதே அணுகு முறையை அனுபவிக்க முடியும் என்று சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவ் 14ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவி்த்தார்.
செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளிக்கையில், வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையை சீனா உறுதியாக செயல்படுத்தி, வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் சீனாவுக்கு வந்து சட்டப்படி தொழில் நடத்துவதை வரவேற்கிறது என்று அவர் கூறினார்.
வெளிநாடுகளின் மேலதிக ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனங்கள் சீனாவில் நிறுவப்பட வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.