மலர் அலங்கார கலை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி என அழைக்கப்படும் 13வது உலக மலர்க் கலைக் கண்காட்சி, மார்ச் 26 முதல் 28ம் நாள் வரை, ஷாங்காய் மாநகரின் சர்வதேசக் கூட்ட மையத்தில் நடைபெறவுள்ளது. 20 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்கும். உலக மலர் கலைஞர் என்ற பட்டத்துக்கான போட்டி இக்கண்காட்சியில் நடைபெறும்.
இக்கண்காட்சி, 4 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. சீனாவில், உலக மலர் அலங்கார கலைத் துறையின் முதல் நிலைப் போட்டி நடைபெறுவது இதுவே முதல்முறையாகும் என்று சின்குவா செய்தி நிறுவனம் அறிவித்தது.