• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சி நடைபெறவுள்ள நகரமான ஷாங்காய்
  2010-03-16 12:55:09  cri எழுத்தின் அளவு:  A A A   

"fullScreen" VALUE="0">







2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி விரைவில் துவங்கவுள்ளது. இப்போது, சீனாவில் உலகப் பொருட்காட்சிக்கான பங்கெடுப்பாளர்கள் அனைவரும் பேரூக்கத்துடன் ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உலகப் பொருட்காட்சிப் பூங்காவின் வடிவமைப்பு, அரங்குகளின் கட்டியமைப்பு முதலிய வேலைகள் முடிவடைந்து வருகின்றன. பல்வேறு நாடுகளின் பயணிகளை வரவேற்கும் வகையில், ஷாங்காய் மாநகரத்தின் சுற்றுலாத் துறை, சேவைத் தரத்தை உயர்த்த முயற்சி செய்து வருகின்றது.



ஒரு நாளின் நண்பகல், புதிய சின்சியாங் ஹோட்டலின் முதன்மை சமையல் கலைஞரின் உதவியாளர் Shi yiming விருந்தினருக்கு மத்திய உணவு வகைகளைச் சமைத்து வழங்கினார். 57 வயதான Shi yiming, இதுவரை, 38 ஆண்டுகாலம் சமையல் கலைஞராக வேலை செய்து வருகிறார். அவர், APEC உச்சி மாநாடு, ஐந்து நாடுகள் தலைவர்களின் ஷாங்காய் உச்சிமாநாடு உள்ளிட்ட முக்கிய சர்வதேசக் கூட்டங்கள் பலவற்றுக்கு சேவைபுரிந்தவராவார். நடப்பு உலகப் பொருட்காட்சிக் காலத்தில், புதிய சின்சியாங் ஹோட்டல், பல வெளிநாட்டுத் தலைவர்களை வரவேற்கும். இந்தத் தலைவர்கள் அவர்களுடைய துணைவியர்கள் முதலியோர் சுவையான உணவு வகைகளை உண்ணும் பொருட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்டு முதல் Shi yiming, தமது சக பணியாளர்களுடன் உரிய ஏற்பாடுகளை செய்யத் துவங்கினார்.

வேறுபட்ட தேவைக்கு இணங்க, அரசுத் தலைவர் விருந்து, வெளிவிவகார மற்றும் வணிக விவகார விருந்து, தேசிய விருந்து, உலகப் பொருட்காட்சி விருந்து ஆகிய நான்கு வகை விருந்துகளை ஏற்பாடு செய்துள்ளோம் என்று அவர் அறிமுகப்படுத்தினார்.
உலகப் பொருட்காட்சி, சீனாவின் சுவையான உணவுப் பொருட்களை பற்றி விளம்பரம் செய்ய நல்லதொரு வாய்ப்பாகும். தேசிய விருந்து அளிக்கும் கடமையைப் பெற்ற பின், இந்த ஹோட்டலின் உணவுப் பிரிவு, ஆய்வு மற்றும் வளர்ச்சிக் குழு ஒன்றை நிறுவியது. குறிப்பாக, அரசுத் தலைவர் விருந்தை இறுதி செய்ய, இக்குழு நான்கு திங்கள் காலம் ஆய்வு செய்தது. சுவை, மூலப்பொருட்கள், சமையல் முறை முதலியவை, மீண்டும் மீண்டும் விவாதிக்கப்பட்டன. விருந்தினர்கள் சுவைக்கவுள்ள ஒவ்வொரு உணவு வகையும், தலைசிறந்தக் கலைப் பொருட்களைப் போன்றவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, சுமார் 7 கோடி பயணிகளை வரவேற்கவுள்ளது. சுமார் 5 கோடியே 85 இலட்சம் பயணிகள், வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருவர் என்று மதிப்பிடப்படுகிறது. ஷாங்காய்யின் தங்கு விடுதிகளைப் பொறுத்தவரை, இது, முக்கிய அறைகூவலாகும். 2008ம் ஆண்டு இறுதி முதல், ஷாங்காயின் பல்வேறு தங்கு விடுதிகளில், உலகப் பொருட்காட்சியின் போது, சீரான சேவை வழங்கப்படும் வகையில், பல்வேறு பயிற்சிகள் நிறைவேற்றப்பட்டன. உலகப் பொருட்காட்சி பற்றிய பொது அறிவு, ஆங்கில மொழி, இங்கிதங்கள் முதலிய பயிற்சிகள், இதில் இடம்பெறுகின்றன. அதேவேளை, பல்வேறு வேலைகளின் சேவைத் திறனும் ஆக்கப்பூர்வமாக உயர்த்தப்பட்டது. சின்சாங் வென்ஹுவா ஹோட்டல், புன்னகைச் சேவைத் திட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதன் மேலாளர் சோ பெய்னியன் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது பேசுகையில், பாதுகாப்புக்கு, எமது ஹோட்டல் போதியளவில் ஆயத்தப்பணிகளை செய்து, உலகப் பொருட்காட்சிக்கான சிறப்புப் பாதுகாப்புத் திட்டத்தை வகுத்துள்ளது என்று தெரிவித்தார்.
எமது ஹோட்டலின் பணியாளர் அனைவரும், அவசர நிலைமை ஏற்படும் போது செய்ய வேண்டிய சமாளிப்பு நடவடிக்கை, நன்றாக அறிந்துகொண்டனர். நாங்கள், இப்பிரதேசத்தின் தீ அணைப்பாளர்களை அழைத்து, எமது பணியாளர்களுக்கு தீ அணைப்பு அறிவு பற்றிய பயிற்சியை அளித்துள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.

உலகப் பொருட்காட்சியின் வரவேற்புப் பணியில் முக்கிய இடம் பிடிப்பவை, சுற்றுலா நிறுவனங்களே. தற்போது, உலகப் பொருட்காட்சியின் நுழைவுச்சீட்டு விற்பனை நிலைமையைப் பார்த்தால், 30 விழுக்காட்டுப் பயணிகள், சுற்றுலா நிறுவனங்களின் மூலம் சுற்றுலாக் குழுக்களாக, உலகப் பொருட்காட்சிப் பூங்காவைப் பார்வையிட வருகை தருவர். கடந்த ஆண்டு துவக்கம் முதல், சுற்றுலா நிறுவனங்கள், உலகப் பொருட்காட்சி பற்றிய சுற்றுலா நெறியின் பரப்புரைகளை செய்து வருகின்றன. இப்போது, இந்த சுற்றுலா திட்டங்கள் விற்பனை செய்யப்படத் துவங்கியுள்ளது. இதில், உலகப் பொருட்காட்சி நேரடி வண்டி என்னும் சுற்றுலா வடிவம் வரவேற்கப்பட்டது. சுற்றுலா நிறுவனங்களின் முதல் தொகுதி நுழைவுச்சீட்டுகள் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று சின்சியாங் சுற்றுலா நிறுவனத்தின் மேலாளர் Ge wanjun செய்தியாளரிடம் தெரிவித்தார்.



ஷாங்காயில் நட்சத்திர ஹோட்டல்கள் அனைத்துடனும் ஒத்துழைப்பு கொண்டோம். யாங்சி ஆற்று வடிநிலத்திலுள்ள சுற்றுப்புற நகரங்களுடன் ஒத்துழைத்து, சுற்றுலாச் சேவையை வழங்குவோம் என்று அவர் தெரிவித்தார்.
தவிர, வழிகாட்டிகளின் சேவை புரியும் திறனையும் தரத்தையும் உயர்த்துவது, பல்வேறு சுற்றுலா நிறுவனங்களின் முக்கிய கடமையாகும். Ge wanjun இது பற்றி குறிப்பிடுகையில், உலகப் பொருட்காட்சிக்கான சுற்றுலாச் சேவையின் வரையறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று குறிப்பிட்டார்.

மார்ச் மற்றும் ஏப்ரல் திங்கள், பயிற்சி காலமாகும். வாகன நிறுத்தம், சுற்றுலாக் குழு நுழைவு, ஒழுங்கு முதலியவை, இப்பயிற்சியில் இடம்பெறும் என்று அவர் விளக்கினார்.
ஷாங்காய் மாநகரத்தின் சுற்றுலாப் பணியகம் உள்ளிட்ட வாரியங்கள், ஷாங்காய் சுற்றுலாச் சேவைத் தர ஆண்டு என்ற நடவடிக்கையைத் துவக்கின. தரமான சுற்றுலா முதலிய பத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், சுற்றுலாச் சேவையின் தரத்தை உயர்த்த அவை திட்டமிட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040