2010 boao சர்வதேச சுற்றுலா கருத்தரங்கு மார்ச் 20ம் நாள் தெற்கு சீனாவின் ஹெய்னான் மாநிலத்தின் சான்யா நகரில் துவங்கும்.
நிதி நெருக்கடிக்குப் பின் சுற்றுலா பண்பாட்டுத் தொழிலின் சீர்திருத்தம் இந்த கருத்தரங்கின் தலைப்பாகும். பண்பாடு, செய்திஊடகங்கள், தொலைத்தொடர்பு முதலிய துறைகளின் சுற்றுலாவுடனான உறவும் அவற்றிடை இணக்கமான வளர்ச்சியும் குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்படும். சுமார் 2000க்கு மேலானோர் இக்கருத்தரங்குடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் கலந்து கொள்வர். கருத்தரங்கின் போது, பல சர்வதேச சுற்றுலா நிறுவனங்களும் சில நாடுகளின் இத்துறை சார்ந்த பொறுப்பாளர்களும், ஹெய்னான் சுற்றுலா அறிக்கையை நிறைவேற்றுவர். நெருக்கடிக்குப் பிந்தைய சுற்றுலா தொழிலின் வளர்ச்சி குறித்து அவர்கள் முன்மொழிவுகளை முன்வைப்பர் என்று தெரிகிறது.