ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் போது வட அமெரிக்கப் பிரதேசப் பயணிகள் ஒரேமுறையில் ஷாங்காய் மற்றும் தைபெய் இருவேறு நகரங்களில் சுற்றுலா பயணம் செய்வதற்கு வசதி வழங்கும் வகையில், ஷாங்காய் சுற்றுலா சங்கம் தைவான் பிரதேசத்தின் தைபெய் நகரின் சுற்றுலா ஆணையம், தைவான் EVA பயணியர் விமானச் சேவை நிறுவனம் ஆகிய 3 தரப்புகள் ஒத்துழைப்பு மேற்கொள்ளும்.
மே முதல் நாள் தொடங்கும் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்ள, உலகளவில் 7கோடி பயணிகள் ஈர்க்கப்படுவர். தைபெய் நகரில் இவ்வாண்டு நவம்பர் முதல் அடுத்த ஆண்டின் ஏப்ரல் வரை நடைபெறும் சர்வதேச மலர் கண்காட்சியும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் பயணிகளை அதிகமாக ஈர்க்கும் எனத் தெரிகிறது.