2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, 41வது உலகப் பொருட்காட்சியாகும். கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலான காலத்தில் உலகப் பொருட்காட்சி எத்தகைய மாற்றங்களை சந்தித்தது?முதன் முதலில் நடைபெற்ற உலகப் பொருட்காட்சி எப்படி இருந்தது? இந்தக் கேள்வியுடன் சீன வானொலியின் செய்தியாளர் பிரிட்டன் விக்டோரிய மற்றும் அல்பர்ட அருங்காட்சியகத்துக்குச் சென்றார். இவ்வருங்காட்சியகம், முதலாவது உலகப் பொருட்காட்சிக்காக சிறப்பாக கட்டியமைக்கப்பட்டது.
1851ம் ஆண்டின் மே முதல் நாள் துவங்கிய "பன்னாட்டு தொழிற்துறை உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி", முதலாவது உலகப் பொருட்காட்சியாக கருதப்படுகிறது. 5 திங்கள் நீடித்த இப்பொருட்காட்சி 60 இலட்சத்துக்கு மேலான பார்வையாளர்களை ஈர்த்தது. இது, அப்போதைய பிரிட்டனின் மொத்த மக்கள் தொகையில் 30 விழுக்காட்டுக்கு மேல். இது, அப்போதைய பிரிட்டன் சமூகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது என்று இவ்வருங்காட்சியகத்தின் தலைவர் மார்க் ஜோன்ஸ் கூறினார்.
உலகளவிலான ஒரு பொருட்காட்சி, நடைமுறை முக்கியத்துவத்தை ஏற்படுத்த முடியும். இது, மக்களிடையில் தேசப் பெருமையையும் ஏற்படுத்த முடியும். பல பிரிட்டன் மக்கள் முதலாவது உலகப் பொருட்காட்சியைப் பார்வையிட்டனர். ஒத்த அனுபவம், அவர்களது பொதுவான தேச உணர்வை உருவாக்குவதற்கு முக்கியமானது என்று அவர் கூறினார்.
தவிர, முதலாவது உலகப் பொருட்காட்சி 1 இலட்சத்து 86 ஆயிரம் பவுண்ட லாபத்தை ஏற்படுத்தியது. இத்தொகை, அறிவியல் மற்றும் கலை மையங்களின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டது. இத்தொகையை பயன்படுத்தி அறிவியல் மற்றும் கலை வளர்ச்சிக்கான நிதியத்தையும் பிரிட்டன் அரசு நிறுவியது.
காலப்போக்கில் உலகப் பொருட்காட்சியின் வடிவம் மாறி வருகிறது. ஆனால் அதன் அறிவு ஊட்டும் தன்மை மாறாது. இது பற்றி மார்க் ஜோன்ஸ் கூறியதாவது
உலகப் பொருட்காட்சியின் அளவு பெரிதாகி வருகிறது. மக்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது, தொடர்ந்து இப்பொருட்காட்சியின் நோக்கமாகும். சுருக்கமான உலகத்தை அனுபவிக்கும் உணர்வு, மதிப்பளிக்கத்தக்கது என்று அவர் கூறினார்.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் பிரிட்டன் அரங்கத்தின் வடிவமைப்பு ஆலோசகராகவும், மார்க் ஜோன்ஸ் உள்ளார். பல முறை சீனாவில் பயணம் மேற்கொண்ட அவர், ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் வெற்றி மீது நம்பிக்கை தெரிவித்தார்.