உலக பொருட்காட்சி துவங்குவதற்கு முந்தைய 30ம் நாளை வரவேற்கும் விதமாக, உலகத்தை அரவணைப்பது என்ற தலைப்பில் இசை அரங்கேற்றம், மார்ச் 30ம் நாள் ஷாங்காயின் ஹூவாங்பூ ஆற்றின் கரையில் நடைபெறும். தவிர, வியென்னாவின் Danube, இந்தியாவின் கங்கை, எகிப்தின் Nile, அமெரிக்காவின் Hudson, பிரேசிலின் Amazon ஆகிய புகழ் பெற்ற ஆறுகளின் கரைகளிலும் அதே நாள் இசை அரங்கேற்றங்கள் நடைபெறும்.
சீன கலை நட்சத்திரங்களைத் தவிர, தென் கொரியா, ரஷியா, இந்தியா ஆகிய நாடுகளின் திரைப்பட மற்றும் இதர கலைஞர்கள் இந்த அரங்கேற்றங்களில் கலந்து கொள்வர்.
அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் முதலிய நாடுகளின் செய்தி ஊடகங்கள் இந்த அரங்கேற்றங்களின் ஒலி மற்றும் ஒளிபரப்புகளை மேற்கொள்ளும்.