உலகப் பொருட்காட்சிக்குச் சேவைபுரியும் பணியாளர்கள் மழைதூறலில் நனைந்து கொண்டே சீன அரங்கின் முன் சதுக்கத்தில் அனைத்து ஆயத்தப் பணிகளையும் நிறைவேற்றி மதிப்புக்குரிய விருந்தினர்களுக்குச் சிறந்த சேவை வழங்க உறுதி மொழி கூறினர். ஷாங்களாய் உலகப் பொருட்காட்சி ஆணையகத்தின் தலைவர் ஹுங் ஹௌ கூறியதாவது.
உலகப் பொர்டுகாட்சிப் பூங்கா துவங்குவதற்கு முன் பல்வகை அடிப்படை வசதிகள், அரங்குகளிலுள்ள வசதிகள் மற்றும் சேவை வசதிகளை பன்முகங்களிலும் பரிசோதனை செய்ய வேண்டும். பல்வகை வசதிகள் சீராக இயங்குவது போக்குவரத்து மற்றும் பார்வையாளர்களின் நுழைவு கட்டுப்பாடு உள்ளிட்ட திட்டங்களை சரிவர ஒருங்கிணைக்க வேண்டும். பொருட்காட்சிப் பூங்காவில் பாதுகாப்பு, உயர்ந்த பயன், தடையின்றி இயங்குதல் ஆகியவற்றை முழு மூச்சுடன் உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
தற்போது ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின நுழைவுச் சீட்டை இனம் காணும் இயந்திரங்கள் மற்றும் பாதுகாப்புப் பரிசோதனை இயந்திரங்கள் அனைத்தும் பொருத்தப்பட்டுள்ளன. பார்வையாளர்களுக்கு அரங்கேற்றப்பட இருக்கும் பத்தாயிரம் நிகழ்ச்சிகளின் ஒத்திகை நடைபெறுகின்றது. ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கு வருகை தரும் விருந்தினரை வரவேற்பது பற்றி குவாங்பூ சின் யூன் குடியிருப்பில் வசிக்கின்ற 62 வயதான ying han ping அம்மையார் கூறியதாவது.
என் குடும்பம் ஷாங்காய் மாநகரில் வாழும் மிகவும் சாதாரண குடும்பங்களில் ஒன்றாகும். மூன்று தலைமுறையினர் ஒன்றுபட்டு கூட்டு குடும்பமாக வாழ்கின்றனர். இது சீனாவின் தனிச்சிறப்பியல்பாகும். வெளிநாட்டுக் குடும்பங்களில் குழந்தைகள் வளர்ந்த பின் பெற்றோரை விட்டு பிரிந்து தனி குடும்பமாக வாழ்கின்றனர். என் குழந்தைகள் பெற்றோருடன் இணைந்து வாழவே விரும்புகின்றனர். நாமும் அப்படியே வாழ விரும்புகின்றோம். அவர்கள் விரும்பிய உணவுப் பொருட்களை அவர்களுக்கென சமைக்கின்றோம் என்று அவர் கூறினார்.
உலகப் பொருட்காட்சியை வெற்றிகரமாக நடத்துவது பற்றி சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஷாங்காய் மாநகர குழுவின் செயலாளர் யூ ச்சுன் சன் கூறியதாவது. உலகப் பொருட்காட்சியை நடத்துவது சீன தேசம் நூறு ஆண்டுகளாக எதிர்பார்த்து வரும் விடயமாகும். இதுவே வளரும் நாடுகளில் முதல் முறையாக நடைபெறும் உலகப் பொருட்காட்சியாகும். பொருட்காட்சி நீடிக்கும் 184 நாட்களில் எதிர்பாராத இன்னல்களைச் சந்திப்பது இயல்பே. இருந்தாலும் திட்டமிட்டக் குறிக்கோளை நாம் நிறைவேற்றியே தீர வேண்டும் என்று அவர் கூறினார்.