• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நடைபெறுவதற்கு முந்தைய 30ஆம் நாள்
  2010-04-01 09:50:46  cri எழுத்தின் அளவு:  A A A   
ஏப்ரல் முதல் நாள், 2010ஆம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நடைபெறுவதற்கு முந்தைய 30வது நாளாகும். உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் பல்வேறு திட்டப்பணிகளும் கடைசிக் கட்டத்தில் நுழைந்து, உலகின் பல்வேறு நாடுகளின் நண்பர்களை வரவேற்க தயாராக இருக்கின்றன.

தற்போது, சீன அரங்கு, பொருட்காட்சியின் அச்சு, உலகப் பொருட்காட்சி மையம், உலகப் பொருட்காட்சி பண்பாட்டு மையம் முதலிய நிரந்தரக் கட்டிடங்கள் கட்டிமுடிக்கப்பட்டன. பூங்காவில் தொடர்புடைய வசதிகள் அடிப்படையில் கட்டிமுடிக்கப்பட்டன. 70 விழுக்காட்டு காட்சி அரங்குகள் ஏப்ரல் 20ஆம் நாள் சோதனை முறையில் இயங்கத் துவங்கும்.

மேலும், உலகப் பொருட்காட்சிக்கு துணைபுரியும் பொருட்டு ஷாங்காய் மாநகரில் மேற்கொள்ளப்பட்ட அடிப்படை வசதிகளின் கட்டுமானம் மற்றும் திருத்தத் திட்டப்பணிகள் விரைவில் பயன்பாட்டில் இறங்கும்.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றிய வெளிநாடுகளில் பரப்புரை செய்யும் பணி சீராக நடைபெற்று வருகிறது. விற்கப்பட்ட இப்பொருட்காட்சியின் நுழைவுச் சீட்டுகளின் எண்ணிக்கை 2 கோடியே 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது. உலகளவில் செய்தி ஊடகங்களின் உயர் கவனத்தை இப்பொருட்காட்சி ஈர்த்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040