தற்போது, சீனாவில் உலகின் முன்னேறிய நிலையை எட்டிய வானிலை முன்னறிவிப்புச் சேவை முறைமை உருவாக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் போது, காற்றுத் தரம், புற ஊதா கதிர் வீச்சு அளவு, வெப்ப அலை முன்னெச்சரிக்கை உள்ளிட்ட வானிலைச் சேவையை சீன மற்றும் வெளிநாட்டு விருந்தினர்களுக்கு இது வழங்கும்.
உலகப் பொருட்காட்சி நடைபெறும் மே முதல் அக்டோபர் திங்கள் வரையான காலம், ஷாங்காயின் வெள்ளக் காலமாகும். இதற்காக, சீன வானிலை வாரியம் உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் முன்னேறிய வானிலை ஆய்வு அமைப்பு முறையை கட்டியமைத்ததோடு, பல்வகைச் சீற்றதுக்கான முன்னெச்சரிக்கை பற்றிய பல சர்வதேச மாதிரித் திட்டப்பணிகள் ஷாங்காயில் மேற்கொள்ளப்பட உலக வானிலை அமைப்புக்கு முன்முயற்சியுடன் கேட்டுக் கொண்டுள்ளது. ஏப்ரல் 2ஆம் நாள் சீன வானிலைப் பணியகத்திலிருந்து கிடைத்த தகவல் இதைத் தெரிவித்தது.