ஏப்ரல் 2ம் நாள் தொடக்கம், ஷாங்காய் மாநகரிலுள்ள உலகப் பொருட்காட்சி தொடர்பான பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் பாதுகாப்பு நிலையுடன் ஒப்பிட்டால், இதன் நிலையும் சமமாகும்.
அதேவேளை, ஷாங்காய் தொடர்வண்டி நிலையம், தெற்கு நிலையம் ஆகிய இருவேறு இடங்களில் 100 ஆயுத மேந்தியகாவற்துறையினர் இரவு பகலாக கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஷாங்காய் இருப்புப்பாதைக் காவல்துறை இன்று இச்செய்தியை அறிவித்தது.
உலகப் பொருட்காட்சியின் போது தொடர்வண்டி போக்குவரத்தின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் வகையில், கண்டிப்பான பாதுகாப்பு நடவடிக்கைகளும் அவசர நிலையைச் சமாளிக்கும் பல திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.