• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சியில் பல்வேறு நாடுகளின் அரங்குகள்
  2010-04-06 18:46:18  cri எழுத்தின் அளவு:  A A A   

2010ம் ஆண்டு மே திங்கள் முதல் நாள், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி துவங்கும். அப்போது, உலகின் 240க்கு மேலான நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள், இதில் கலந்து கொள்ளும். தற்போது, கட்டியமைக்கப்பட்டுள்ள மற்றும் கட்டியமைக்கப்பட்டு வருகிற பல்வேறு நாடுகளின் அரங்குகள், சொந்த நாட்டுப் பண்பாட்டுச் சூழ்நிலையை வெளிக்கொணர பாடுபட்டு வருகின்றன.

இந்திய அரங்கின் பண்பாட்டு நடவடிக்கைகள் செழுமையாக இருக்கும். கட்டிடம், உணவு, கைவினைப் பொருட்கள், நிகழ்ச்சி முதலியவற்றின் மூலம், இந்தியப் பண்பாடு வெளிப்படுத்தப்படும் என்று இந்திய அரங்கிற்கான பொறுப்பாளர் Rajesh Kumar கூறினார்.

நாள்தோறும், இங்கு ஒரு பெரிய கலைநிகழ்ச்சி அரங்கேற்றப்படும். இங்கு இந்திய உணவு மண்டபமும் இருக்கிறது. பார்வையாளர் சுவையான இந்திய உணவுப் பொருட்களை சுவைக்கலாம். இந்தியக் கைவினைப் பொருட்களின் தயாரிப்பையும் மக்கள் இங்கு காணலாம் என்று Rajesh Kumar கூறினார்.

மதிப்பின்படி, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் போது, 7 கோடி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணியர் வருகை தருவர். பல்வேறு நாடுகளின் அரங்குகள், பார்வையாளர்களுக்கு புதிய, தனிச்சிறப்பான அனுபவங்களை வழங்கும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040