இந்திய அரங்கின் பண்பாட்டு நடவடிக்கைகள் செழுமையாக இருக்கும். கட்டிடம், உணவு, கைவினைப் பொருட்கள், நிகழ்ச்சி முதலியவற்றின் மூலம், இந்தியப் பண்பாடு வெளிப்படுத்தப்படும் என்று இந்திய அரங்கிற்கான பொறுப்பாளர் Rajesh Kumar கூறினார்.
நாள்தோறும், இங்கு ஒரு பெரிய கலைநிகழ்ச்சி அரங்கேற்றப்படும். இங்கு இந்திய உணவு மண்டபமும் இருக்கிறது. பார்வையாளர் சுவையான இந்திய உணவுப் பொருட்களை சுவைக்கலாம். இந்தியக் கைவினைப் பொருட்களின் தயாரிப்பையும் மக்கள் இங்கு காணலாம் என்று Rajesh Kumar கூறினார்.
மதிப்பின்படி, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் போது, 7 கோடி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணியர் வருகை தருவர். பல்வேறு நாடுகளின் அரங்குகள், பார்வையாளர்களுக்கு புதிய, தனிச்சிறப்பான அனுபவங்களை வழங்கும்.