ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் அமைந்துள்ள பிரான்ஸ் அரங்கு ஏப்ரல் 6ம் நாள் செய்தி ஊடகங்களுக்குத் திறக்கப்பபட்டது. உணர்வு கொண்ட நகர் என்ற தலைப்பிலான இவ்விரங்கு படிப்படியாக அதன் அற்புதமான அழகை வெளிப்படுத்தியுள்ளது. இதுவரை பூங்காவில் மைய கோடு, சீன அரங்கு, தலைப்பு கொண்ட அரங்கு, மையப்பகுதி, பண்பாட்டு மையம் முதலியவை முழுமையாக கட்டியமைக்கப்பட்டுள்ளன. மற்ற அரங்குகள் பலவும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
உலகப் பொருட்காட்சி துவங்குவதை நெருங்கி வரும் வேளையில் Van gogh, Rodin முதலிய கலை முன்னோடிகள் படைத்த கலைப் பொருட்கள் ஏப்ரல் திங்கள் பிற்காலத்தில் பூங்காவுக்கு கொண்டுவரப்படும். டென்மார்க் நாட்டின் கருவூலமாக அழைக்கப்படுகின்ற "மனிதர் உடல் கொண்ட அழகான மீன் சிலை"கடந்த நாட்களில் ஷாங்காய் வந்தடைந்தது.