வளரும் நாடுகளின் வளர்ச்சி நிலைமை பற்றிய 2009ம் ஆண்டு அறிக்கையை, போஆவ் ஆசிய மன்றம் இன்று வெளியிட்டது. கடந்த ஆண்டு உலகப் பொருளாதாரத்தின் மிகச் சிறந்த மறுமலர்ச்சி, எதிர்பார்க்கப்பட்டதை பெரிதும் தாண்டியது. வளர்ந்த நாடுகளை விட, வளரும் நாடுகளின் அதிகரிப்பு மிக வலுவாக இருந்தது என்று இவ்வறிக்கை கூறுகிறது.
கடந்த ஆண்டு, வளர்ந்த நாடுகளில் பொருளாதாரம் 3.2விழுக்காடு குறைந்தது. உலகப் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடையாத முக்கிய காரணம், வளரும் நாடுகளின் பொருளாதார அதிகரிப்பு. சீனா, இந்தியா உள்ளிட்ட முக்கிய வளரும் நாடுகளின் பொருளாதார அதிகரிப்பு மிகத் தெளிவாக இருந்தது என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.