போஆவ் ஆசிய மன்ற ஆண்டு கூட்டம் ஏப்ரல் 10ம் நாள் சீனாவின் ஹைநான் மாநிலத்தின் போஆவ்வில் துவங்கியது. சீனத் துணை அரசுத் தலைவர் ச்ச்சிங்பின் துவக்க விழாவில் உரை நிகழ்த்தினார். ஆசியா மற்றும் உலகில் பசுமையான தொடரவல்ல வளர்ச்சியை நிறைவேற்ற பல்வேறு ஆசிய நாடுகள் பொருளாதார அதிகரிப்பு சமூக வளர்ச்சி மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பை ஒருங்கிணைந்து திட்டமிட வேண்டும். இதற்காக சீனா அந்நாடுகளுடன் இணைந்து பாடுபட விரும்புவதாக சிச்சிங்பின் தம் உரையில் தெரிவித்தார்.
கிழக்குத் திமோர், ஆப்கானிஸ்தான், மங்கோலியா, தெமைபார்க், லாவோஸ் முதலிய நாடுகளின் அரசியல் தலைவர்களும் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தினர்.