ஷாங்காய் புதுங் lujiazui எனும் பகுதியிலுள்ள கீழை முத்து கோபுரத்தின் உச்சியில் 13ம் நாள் அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து நிகழ்ந்தது. தீ அணைப்புப் பணியாளர்கள் விரைந்து சென்று அதை அணைத்தனர். இதில் உயிர் இழப்பு ஏதும் நிகழவில்லை.விபத்துக்கு முன், ஷாங்காய் மாநகரில் இடியுடன் மழை பெய்தது.
விபத்துக்கான காரணம் இதுவாக இருக்கக் கூடும் என்று கருதப்படுகின்றது.கீழை முத்து கோபுரத்தின் உயரம் 468 மீட்டராகும். ஷாங்காய் மாநகரில் புகழ்பெற்ற காட்சி இடம் இதுவாகும்.