நிதி உச்சி மாநாட்டுக்கான முன்மொழிவுகள்
2010-04-18 19:26:51 cri எழுத்தின் அளவு: A A A
ஜுன் திங்களில் 20 நாடுகள் குழுவின் டொரான்டொ நிதி உச்சி மாநாடு குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பி நாடுகளின் நிதி அமைச்சர்கள் 17ம் நாள் நிலைபாடுகளை ஒருங்கிணைத்தனர். 3 அம்சங்களில் பொது கருத்துக்களைத் தெரிவிப்பதை அவர்கள் முன்வைத்தனர்.
தொடரவல்ல வளர்ச்சிக்காக, ஒரு கட்டுக்கோப்பை வகுக்க வேண்டும். அனைத்து நாடுகளும் உலகப் பொருளாதாரத்தின் சமமற்ற நிலையைத் தீர்க்க பாடுபட வேண்டும். உலக நிதி கண்காணிப்பு சீர்திருத்தத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். இவை, டொரான்டொ நிதி உச்சி மாநாடில் ஐரோப்பிய ஒன்றியம் முன்வைக்கும் 3 முக்கிய கருத்துக்களாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார மற்றும் நாணய விவகாரங்களுக்குப் பொறுப்பான கமிஷனர் Olli Rehn இவ்வாறு கூறினார்.
தொடர்புடைய செய்திகள்