20 நாடுகள் குழுவின் நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கித் தலைவர்கள் கூட்டம் 23ஆம் நாள் வாஷிங்டனில் நடைபெற்றது. ஒட்டுமொத்த உலகப் பொருளாதார நிலைமை, தொடரவல்ல வளர்ச்சிக் கட்டுக்கோப்பு, நிதிக் கண்காணிப்பு, சர்வதேச நிதி அமைப்பின் சீர்திருத்தம், எரியாற்றலுக்கான மானியம் உள்ளிட்ட பிரச்சினைகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
உலகப் பொருளாதாரத்தின் தொடரவல்ல மறுமலர்ச்சியை நிறைவேற்ற, பல்வேறு நாடுகள் தத்தனது நாட்டின் நிலைமைக்கிணங்க வேறுபட்ட கொள்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் கருத்து தெரிவித்தது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சீன நிதி அமைச்சர் சியே சுரென் பேசுகையில், வளர்ந்த நாடுகள் பொருளாதார ஊக்குவிப்பு விலகல் தந்திரத்தைச் செயல்படுத்தும் போது, உலகப் பொருளாதாரத்துக்கு, குறிப்பாக வளரும் நாடுகளுக்கு ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தை போதியளவில் கருத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
சீன மத்திய வங்கித் தலைவர் ச்சோ சியௌசுவான் இக்கூட்டத்தில் பேசுகையில், 20 நாடுகள் குழு உள்ளிட்ட அமைப்புகளின் பங்கை முழுமையாக வெளிக்கொணர்ந்து, மேலும் பாதுகாப்பான நிதானமான மற்றும் பயனுள்ள சர்வதேச நிதி அமைப்பு முறையை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.