26ம் நாள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, இறுதியான சோதனை முறையில் இயங்கவுள்ளது. சோதனையில் பங்கெடுக்கும் மக்கள் தொகை ஒரு லட்சத்தை எட்டக்கூடும். இது வரை, உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் பாதுகாப்புச் சோதனை, தொண்டர்களின் சேவை, உணவகங்கள், அரங்குகளில் நுழைய வரிசையில் காத்திருப்பது, போக்குவரத்து உள்ளிட்ட பணிகள் மேம்பட்டு வருகின்றன.
25ஆம் நாள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி 5வது முறையாக சோதனை முறையில் இயங்கியது. சோதனையில் கலந்து கொண்டோரின் எண்ணிக்கை, சுமார் 4 லட்சத்தை எட்டியது.
அரங்குகளின் வெளியே வரிசையில் காத்திருக்கும் நேரம் அளவுக்கு மீறி அதிகரிக்கும் பிரச்சினை தொடர்பாக, வரிசையாக நிற்கும் திட்டம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இன்று உலகப் பொருட்காட்சி துவங்குவதற்கு முந்தைய 5வது நாளாகும். துவக்க விழா மற்றும் நிறைவு விழாவின் ஒத்திகை மற்றும் இயங்கல் ஆயத்தப்பணிகள் இறுதிக்கட்டத்தில் நுழைந்துள்ளன.