ஏப்ரல் 20ம் நாள் முதல் 27ம் நாள் வரை ஷாங்காய் உலகப் பொருட்காட்சி 6 முறை சோதனை முறையில் இயங்கியுள்ளது. இவற்றின் போது லட்சக்கணக்கானோர் இந்த பொருட்காட்சிப் பூங்காவில் பயணம் மேற்கொண்டனர்.
இந்த சோதனை நடவடிக்கையின் போது விபத்து மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரச்சினை ஏதும் ஏற்பட வில்லை. மொத்தமாக சீராக இயங்கிய சோதனை நடைமுறை உலகப் பொருட்காட்சி அதிகாரப்பூர்வமாக இயங்குவதற்குச் சிறந்த அடிப்படையிட்டுள்ளது.
6 முறை சோதனைகளின் மூலம் பூங்காவில் அறிவியல் முறையில் பயணிகளுக்கு வழிகாட்டும் நடவடிக்கைகள் மேலும் மேம்பட்டுள்ளன. எளிய துரித உணவு விற்பனை இடங்கள் அதிகரித்துள்ளன. வரிசையில் காத்திருக்கும் நேரம் குறைந்துள்ளது.