ஏப்ரல் 20ம் நாள் முதல் இதுவரை, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் 6 முறை சோதனை பயிற்சிகளில் மொத்தம் லட்சக்கணக்கான பேர் கலந்துகொண்டனர். அதன் நிலைமை சீராகியது. ஷாங்காய் உலகப் பொருட்காட்சி செயற்குழுவின் நிரந்தர துணைத் தலைவரும், ஷாங்காய் மாநகரத்தின் துணைத் தலைவருமான யாங் சியுங் 28ம் நாள் ஷாங்காயில் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் இதை தெரிவித்தார்.
சோதனை பயிற்சி மூலம், வசதிகளைப் பரிசோதனை செய்து, சேவைகளை மேம்படுத்தும் இலக்கு அடைத்துள்ளது. தகவல்களை காலதாமதமின்றி வெளியிடுவது, பாதுகாப்பு சோதனை வேகத்தை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம், ரசிகர்கள் உலகப் பொருட்காட்சிப்பூங்காவில் ஒழுங்காக பார்வையிட்டனர். முன்கூட்டியே பதிவு அமைப்பு முறை மேலும் மேம்பட்டு, தொண்டர்களின் சேவைத்திறன் உயர்த்தியுள்ளது என்று அவர் அறிமுகப்படுத்தினார்.
எதிர்வரும் 184 நாட்களில், ஏற்பாட்டுக்குழு, சேவைத் திறனை மேலும் உயர்த்தி, ரசிகர்களுக்கும் கண்காட்சியில் கலந்துகொண்ட தரப்புகளுக்கும் சீராக சேவை புரியும் என்றும் யாங்சியுங் தெரிவித்தார்.