மக்கெள சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி Cui Shi An ஏப்ரல் 30ஆம் நாள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் துவக்க விழாவில் கலந்து கொள்வார். மே திங்கள் முதல் நாள் மக்கெள அரங்கின் திறப்பு விழாவுக்கு அவர் தலைமை தாங்குவார்.
ஏப்ரல் 20ஆம் நாள் முதல் 26ஆம் நாள் வரை ஷாங்காய் உலகப் பொருட்காட்சி 6 முறை சோதனை முறையில் இயங்கியது. மக்கெள அரங்கு இச்சோதனையில் பங்கெடுத்து, நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை பயணிகளை வரவேற்றது.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் மக்கெள ஆயத்த அலுவலகத்தின் தலைவர் Yang Bao Yi அம்மையார் பேசுகையில், மக்கெள அரங்கு, பாதுகாப்பு முதன்மை என்பதை கோட்பாடாகக் கொண்டுள்ளதாகவும், மக்கெள அரங்கில் செழிப்பான அம்சங்கள் பயணிகளுக்கு காட்சிக்கு வைக்கப்படும் என்றும் கூறினார்.