துவங்கவுள்ள ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை மேடையாகப் பயன்படுத்தி, சீனாவும் ஜப்பானும், பல்வகை வடிவங்களிலான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை மேற்கொள்வதன் மூலம், இரு நாட்டு மக்களுக்கிடைத் தொடர்பை புதிய உச்ச நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்று ஜப்பானுக்கான சீனத் தூதர் Cheng Yong Hua 27ஆம் நாள் தெரிவித்தார்.
டோக்கியோ நகரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி இது வரையிலான அளவில் மிகப் பெரிய மனித நேய நாகரீக சிறப்பு நிகழ்ச்சியாகும். இது வளரும் நாட்டில் முதன்முறையாக நடைபெறும் உலகப் பொருட்காட்சியுமாகும் என்று தெரிவித்தார். சீன மக்கள் அனைவரின் ஆற்றலையும், உலக மக்களின் விவேகத்தையும் கொண்டு, வெற்றிகரமான, தலைசிறந்த உலகப் பொருட்காட்சியை சீன அரசும் மக்களும் நடத்துவர் என்றும் அவர் கூறினார்.