ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் துவக்கத்தை முன்னிட்டு, இதுவரை உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 14ஆயிரம் செய்தியாளர்கள் ஷாங்காய் மாநகரம் வந்தடைந்தனர். இப்பொருட்காட்சி 6முறை பரிசோதனைகளில் இயங்கியதன் மூலம், அதன் செயல்பாட்டு அமைப்புமுறை, சேவை வசதிகள் உள்ளிட்டவற்றில் அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அது, உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களிடை புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கும் மேடையாக அமைந்தது என்று பல வெளிநாட்டுச் செய்தி ஊடகங்கள் கருத்து தெரிவித்தன.
வெற்றிகரமான தலைசிறந்த மற்றும் மறக்க முடியாத உலகப் பொருட்காட்சியை சீனா நடத்துமென அவை நம்புகின்றன.