30ம் நாளிரவு உலகப் பொருட்காட்சியின் துவக்க விழாவை ஷாங்காய் மாநகரம் வரவேற்கும். இதுவரை, உலகப் பொருட்காட்சிக்கான ஆயத்தப் பணிகள் செய்து முடிக்கப்பட்டு விட்டன.
விழா, 30ம் நாளிரவு 8:10 மணிக்கு huang pu ஆற்றின் கரையின் இருபுறமும் அமைந்த உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் துவங்கும். இத்துவக்க விழாவில் உலகப் பொருட்காட்சிப் பண்பாட்டு மையத்தில் நடைபெறும் கலை நிகழ்ச்சி அரங்கேற்றம், huang pu ஆற்று கரையின் இரு புறத்திலும் விளக்கு நீருற்று மற்றும் வான வேடிக்கை அரங்கேற்றம் ஆகியவை அடங்கும்.
ஷாங்காயில் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் சீராக இருக்கின்றது. இதைத் தவிர, மருத்துவ சிகிச்சை, உணவு முதலியவற்றிலான ஆயத்தப் பணிகள் செய்து முடிக்கப்பட்டு விட்டன.