2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் துவக்க விழா ஏப்ரல் 30ம் நாளிரவு 8 மணியளவில் உலகப் பொருட்காட்சி பண்பாட்டு மையத்தில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவ், துவக்கத்தை அறிவித்தார்.
8 ஆண்டுகளாக கவனமுடன் ஆயத்தம் செய்யப்பட்ட உலகப் பொருட்காட்சி, உலக விருந்தினர்களை வரவேற்க தயார் என்று இது குறிக்கிறது.
சீன துணைத் தலைமையமைச்சரும் இப்பொருட்காட்சி ஆயத்த கமிட்டித் தலைவருமான wang qishan உரை நிகழ்த்துகையில், 246 நாடுகள் சர்வதேச அமைப்புகள் மற்றும் தொழில்நிறுவனங்களின் ஆக்கமுள்ள பங்கெடுப்புக்கு நன்றி தெரிவித்தார். நகரத்தை தலைப்பாகக் கொள்கின்ற இப்பொருட்காட்சி, பல்வேறு நாடுகளின் மக்கள் புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றம் செய்கின்ற மேடையாகும் என்று அவர் கூறினார்.
உலகப் பொருட்காட்சி, காலத்தின் வளர்ச்சி, பரிமாற்றம் மற்றும் போட்டியின் தேவையை நிறைவு செய்கிறது. இப்பொருட்காட்சி மூலம் மேலும் நிலையான, சமமான, பாதுகாப்பான, இணக்கமான நகரத்தை கட்டியமைக்கும் உணர்வை மக்கள் உயர்த்துவர் என்று சர்வதேச கண்காட்சி ஆணையத்தின் தலைவர் Jean-PierreLafon துவக்க விழாவில் தெரிவித்தார்.
பல்வேறு நாடுகளின் கலைஞர்கள் அரங்கேற்றம் செய்வர். ஹுவாங்பூ ஆற்றின் இரு கரைகளிலும் வானவேடிக்கை மற்றும் நீரூற்று அரங்கேற்றங்களும் கோலாகலமாக நடத்தப்படும்.
அரசுத் தலைவர் ஷுசிந்தாவ் உள்ளிட்ட சீன தலைவர்களும், 20 வெளிநாட்டுத் தலைவர்களும் துவக்க விழாவில் கலந்து கொள்கின்றனர்.