2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் துவக்க விழாவில் உலகின் பல்வேறு வெளிநாடுகளில் வாழ்கின்ற சீனர் மாபெரும் கவனம் செலுத்தினர். வெளிநாடுகளில் வாழ்கின்ற சீனர் பலர் இத்துவக்க விழா நிகழ்ச்சியை தொலைக்காட்சி மூலம் கண்டுரசித்தனர். தொடர்புடைய கொண்டாட்ட நடவடிக்கைகளையும் அவர்கள் நடத்தினர். தாய்நாடு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை வெற்றிகரமாக நடத்துவதற்காக அவர்கள் அதிகப் பெருமை மற்றும் ஊக்கம் அடைந்தனர்.
அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளில் வாழ்கின்ற சீனர் இத்துவக்க விழாவின் தனிச்சிறப்பியல்பைப் பாராட்டினர்.
தென்கொரியாவில் பயில்கின்ற சீன மாணவர்கள், இணைய மற்றும் தொலைபேசியின் மூலம், இத்துவக்க விழா நிகழ்ச்சியை அனுபவித்தனர்.