ஏப்ரல் திங்கள் 30ம் நாளிரவு நடைபெற்ற ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் துவக்க விழாவில் இந்தியாவிலுள்ள பல்வேறு துறைகள் மாபெரும் கவனம் செலுத்தின. இது பற்றி சில இந்திய செய்தி ஊடகங்கள் செய்திகளை உடனுக்குடன் அறிவித்தன. சீனப் பொருளாதாரத்தின் மாபெரும் வளர்ச்சியை ஷாங்காய் உலகப் பொருட்காட்சி காட்டியதை அவை பாராட்டின.
இத்துவக்க விழாவின் புகைப்படங்களையும் விமர்சனக் கட்டுரைகளையும் இந்தியாவின் புகழ்பெற்ற Hindu செய்தியேடு மே முதல் நாள் வெளியிட்டது. 2008ம் ஆண்டு நடைபெற்ற பெய்ஜி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பிறகு, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி சீனா நடத்திய உலகின் கவனத்தை ஈர்க்கும் பிரமாண்டமான கூட்டமாகும் என்று விமர்சனக் கட்டுரை கூறியது.
அடுத்த சில திங்களில், பல்வேறு வெளிநாடுகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் உலகின் முன்னேறிய அறிவியல் தொழில் நுட்பத்தையும் பல்வகை பண்பாடுகளையும் அறிந்து கொள்ளும் இடமாக ஷாங்காய் உலகப் பொருட்காட்சி மாறும் என்று சில இந்திய செய்தி ஊடகங்கள் கூறின.