• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வெளிநாட்டு செய்தி ஊடகங்களின் கவனம்
  2010-05-01 09:59:44  cri எழுத்தின் அளவு:  A A A   
2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் துவக்க விழா ஏப்ரல் 30ம் நாளிரவு நடைபெற்றது. பல வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் இவ்விழாவில் கவனம் செலுத்தி உயர்வாக பாராட்டின. சிங்கப்பூரின் வானொலி நிலையமும் தொலைக்காட்சி நிலையமும் துவக்க விழா பற்றிய செய்திகளை வெளியிட்டன. சிங்கப்பூரின் lianhe Zaobao, நீரிணை டைம்ஸ் முதலிய செய்தியேடுகளில் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றிய சிறப்பு பகுதிகள் உருவாக்கப்பட்டு செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் துவக்க விழா முழு உலகின் பார்வையை ஈர்த்தது என்று Express எனும் பாகிஸ்தானின் செய்தி தொலைக்காட்சி நிலையம் தெரிவித்தது. சீன தனிச்சிறப்புடைய இத்துவக்க விழா கோலாகலமானது என்று பாகிஸ்தான் GEO தொலைக்காட்சி நிலையம் அறிவித்தது. தவிர, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, ரஷியா, ஜெர்மனி,பிரான்ஸ் முதலிய நாடுகளின் செய்தி ஊடகங்கள் இத்துவக்க விழாவை வெகுவாக பாராட்டியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040