மே முதல் நாள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பார்வையாளர்களை வரவேற்க துவங்கியது. 6 திங்கள் நீடிக்கும் ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான கலை அரங்கேற்றமும் இன்று அதிகாரப்பூர்வமாக துவங்கியது.
50க்கும் அதிகமான கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. தென் கொரியா, ரஷியா, துருக்கி முதலிய நாடுகளின் கலைஞர்கள் பல்வடிவங்களில் விழா ஆடை அணிந்த வண்ணம் தமது நாட்டின் முதல் நிலை தேசிய இன ஆடல்பாடல்களை அரங்கேற்றியுள்ளனர். ஆடல்பாடல், இசை மற்றும் பூ இடம் பெறும் மகிழ்ச்சிகரமான சுற்றுலா வாகன அணிகளும் பொருட்காட்சிப் பூங்காவில் பரப்புரை மேற்கொண்டுள்ளன. இதனால் பூங்காவில் நிறைந்த மகிழ்ச்சி உச்சிக்கு தூண்டப்படுகின்றது.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் போது காலை 9:30 முதல் இரவு பத்து மணி வரை செழுமையான கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும்.