ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் துவக்க விழாவில் கலந்து கொண்ட இத்தாலி சுற்றுச்சூழல் மற்றும் கடல் பாதுகாப்பு அமைச்சர் Stefania Prestigiacomo மே முதல் நாள் கருத்து தெரிவித்தார். நடப்பு உலகப் பொருட்காட்சியின் தலைப்பு அதாவது "மேம்பட்ட நகரம், மேம்பட்ட வாழ்க்கை"என்பது தமக்கு ஆழமாக பதிந்து விட்டதாக அவர் கூறினார்.
இத்தாலி சீனாவில் தனது தொழில் நிறுவனங்களையும் உற்பத்திப் பொருட்களையும் வெளிக்காட்டும் வாய்ப்பாக நடப்பு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி விளங்குகின்றது. இது மட்டுமல்ல பல்வேறு நாடுகள் எதிர்வரும் நகரவாசிகளின் வாழ்க்கை நிலையைச் சீராக்கி நகரின் தொடரவல்ல வளர்ச்சியை நிறைவேற்றும் விருப்பத்தையும் நடப்பு உலகப் பொருட்காட்சி எடுத்துக்காட்டுகின்றது என்று அவர் கூறினார்.