2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பூங்காவின் திறப்பு விழா மே முதல் நாள் நடைபெற்றது. பயணிகள், இப்பூங்காவில் நுழைந்து, உலகிலுள்ள பல்வகை பண்பாடு, நாகரிகங்கள், முன்னேறிய அறிவியல் தொழில் நுட்பங்கள் ஆகியவற்றை உண்ரந்துகொள்ளலாம்.
சீனத் தேசிய மக்கள் அரசயில் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டித் தலைவர் ஜியாஜிங்லின், சர்வதேச கண்காட்சி ஆணையத்தின் தலைவர் Jean-Pierre Lafon ஆகியோர் இப்பூங்காவை கூட்டாக திறந்து வைத்தனர். சர்வதேசக் கண்காட்சி ஆணையத்தின் தலைமை செயலாளர் Vicente Loscertales திறப்பு விழாவில் பேசுகையில் சீனா, உலகப் பொருட்காட்சியில் கலந்துகொண்ட பல்வேறு தரப்புகள், பணியாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தனர். நடப்பு உலகப் பொருட்காட்சி, மனிதக்குலத்தின் சாதனைகளை எடுத்துக்காட்டும் மாபெரும் விருந்தாக இருக்கிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் நகர வளர்ச்சிக்கு தேவையான இயக்கு ஆற்றல் அதிகரிக்கும் என்றும் Loscertales குறிப்பிட்டார்.