சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் 2ம் நாள் முற்பகல் ஷாங்காயில் சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்வதோடு, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் தொடர்புடைய நடவடிக்கைகளில் கலந்து கொண்ட மாலத் தீவு அரசுத் தலைவர் Mohamed Nasheedஉடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பிரமாண்டமாக துவங்கியதற்கு Mohamed Nasheed ஆரவாரமாக வாழ்த்து தெரிவித்தார். நட்பார்ந்த பரிமாற்றத்தையும் இரு நாடுகளிடை ஒத்துழைப்பையும் சீனாவும் மாலத் தீவும் வலுப்படுத்துவதற்கு நடப்பு உலகப் பொருட்காட்சி, புதிய வாய்ப்பை உருவாக்கும் என்று ஹுசிந்தாவ் நம்புகின்றார்.
பஞ்ச சீல கோட்பாடுகளின் அடிப்படையில், மாலத் தீவுடன் இணைந்து பாடுபட்டு, அரசியலில் இரு நாடுகளிடை நம்பிக்கையை இடைவிடாமல் வலுப்படுத்தி, பயனுள்ள ஒத்துழைப்பை ஆக்கப்பூர்வமாக விரிவாக்கி, இரு நாடுகளின் சுமூகமான நட்பார்ந்த ஒத்துழைப்புறவின் மாபெரும் வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புகின்றது என்று ஹுசிந்தாவ் கூறினார்.
சீனாவுடனான உறவுக்கு மாலத் தீவு மாபெரும் முக்கியத்துவம் அளிக்கின்றது. மீன்பிடிப்புத் துறை, சுற்றுலா துறை முதலியவற்றில் சீனாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த மாலத் தீவு விரும்புகின்றது. காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் சர்வதேச ஒத்துழைப்பை முன்னேற்ற, சீனா மேற்கொண்ட மாபெரும் முயற்சியை மாலத் தீவு பாராட்டியது. இரு தரப்புகளின் ஒருங்கிணைப்பையும் கலந்தாய்வுகளையும் வலுப்படுத்த மாலத் தீவு விரும்புகின்றது என்று Mohamed Nasheed தெரிவித்தார்.