மே திங்கள் சீனாவின் 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நீடிக்கும் ஆறு திங்களில் முதல் திங்களாகும். வட சீனாவிலுள்ள பெய்ஜிங், டியென்சின், ஹொபெய், சான்ஷீ, லோநிங், உள்மங்கோலியா ஆகிய மாநிலங்கள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசம் மாறி மாறி உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் சிறந்த கலை நிகழ்ச்சிகளின் அரங்கேற்றத்துக்குப் பொறுப்பேற்கும்.
"சீனப் பண்பு" என்பது இந்நடவடிக்கைகளின் பெயராகும். ஷாங்காய் உலகப் பொருட்காட்சி விவகார ஒருங்கிணைப்பு ஆணையமும் பெருநிலப் பகுதியின் 31 மாநிலங்கள், தன்னாட்சிப் பிரதேசங்கள் மற்றும் மாநகரங்கள், ஹாங்காங், மகௌ ஆகியவையும் இணைந்த முயற்சியில் இது நிறுவப்பட்டது. 5 நாட்களுக்கு ஒரு முறை என்ற வடிவத்தில் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும். இது மே 4ம் நாள் அதிகாரப்பூர்வமாக துவங்கும்.