ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை ஆயத்தம் செய்த போதும், இப்பொருட்காட்சி நடைபெறும் போதும், குறைந்த கரி வெளியேற்றம் என்ற கருத்து வெளிப்படுத்தப்படுகிறது என்று ஷாங்காய் மாநகரின் சுற்றுச்சூழல் ஆணையத்தின் தலைவர் Zhang Quan 5ம் நாள் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதைத் தெரிவித்தார். இப்பொருட்காட்சியை ஆயத்தம் செய்யும் துவக்கத்தில், 272 தூய்மைக்கேட்டு நிறுவனங்கள் மூடப்பட்டு, இடம்பெயர்க்கப்பட்டன. உலகப் பொருட்காட்சிப் பூங்காவைக் கட்டியமைத்த போது, சூரிய ஆற்றல், எரியாற்றல் மற்றும் நீரைச் சிக்கனப்படுத்தும் தொழில் நுட்பங்கள் பொதுவாக பயன்படுத்தப்பட்டன. உலகப் பொருட்காட்சி நடைபெறும் போது, இக்கருத்து பொதுப் போக்குவரத்தில் முன்னுரிமையுடன் வைக்கப்பட்டுள்ளது. பொருட்காட்சிப் பூங்காவில் ஆயிரத்துக்கு அதிகமான தூய்மையான எரியாற்றல் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தவிர, எரியாற்றலை சிக்கனப்படுத்தி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விளக்குகள் பொதுவாக பயன்படுத்தப்பட்டுள்ளன என்று Zhang Quan தெரிவித்தார்.