காலநிலை மாற்றம் மற்றும் வளரும் நாடுகளுக்கான உதவிப் பிரச்சினைகள், அடுத்த திங்களில் நடைபெறவுள்ள 8 நாடுகள் குழு உச்சிமாநாட்டிலும், 20 நாடுகள் குழு உச்சிமாநாட்டிலும் விவாதிக்கப்பட வேண்டும் என்று கனடாவில் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூன் 12ம் நாள் தெரிவித்தார்.
இவ்விரண்டு உச்சிமாநாடுகளை ஏற்பாடு செய்யும் நாடான கனடா, ஆக்கமுடன் பங்காற்ற வேண்டும். இவ்விரண்டு பிரச்சினைகளை இக்குழு உச்சிமாநாடுகள் ஆழமாக விவாதிக்க கடனா வேண்டுகோள் விடுக்க வேண்டும். உலகப் பொருளாதாரத்தின் மீட்சி மற்றும் வளர்ச்சியில் ஈடுபடுவதால், இவ்விரண்டு பிரச்சினைகளைக் கவனிக்காமல் இருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.