மே 22ம் நாள் போலாந்து அரங்கு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் துவங்கும் நாளாகும். பிற்பகல் அரங்கு துவங்கும் நடவடிக்கையில் கலந்து கொண்ட போலாந்து பண்பாட்டுத் தேசிய மரபுச் செல்வ விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் Bogdan Zdrojewski செய்தியாளர் கூட்டம் நடத்தினார். ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் போலாந்து அரங்கு துவங்கிய பின் மாபெரும் வெற்றி ஈட்டியுள்ளது என்று அவர் கூட்டத்தில் உரைநிகழ்த்துகையில் சுட்டிக்காட்டினார்.
இவ்வாண்டு புகழ் பெற்ற இசையமைப்பாளர் Chopin பிறந்த 200வது நிறைவு ஆண்டாகும். இதை முன்னிட்டு சீனாவும் போலாந்தும் பல பண்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மகத்தான இசையமைப்பாளர் Chopinஐ நினைவு செய்தன. Chopinயின் இசைகள் 22ம் நாள் நடைபெற்ற "போலாந்து அரங்கு நாள்"நடவடிக்கைகளில் ஒன்றாக மேற்கொள்ளப்பட்டன.