சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவும் இந்திய அரசுத் தலைவர் பிரதிபா தேவிசிங் பாட்டில் அம்மையாரும் 27ம் நாள் பெய்ஜிங்கில் உரையாடினர்.
சீனாவும் இந்தியாவும் பழம்பெரும் வளரும் நாடுகளாகும். இருதரப்பும் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து கூட்டாக முன்னேற்றமடைவது இரு நாடுகள் மற்றும் இருநாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்குப் பொருந்தியது. இதுவும் மனித உலத்திற்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். இருதரப்பும் நெடுநோக்கு பார்வையுடன் இரு நாட்டுறவை கருதி உருவரைய வேண்டும். உலகின் இணக்கம் மற்றும் தொடரவல்ல வளர்ச்சியைக் கூட்டாக விரைவுப்படுத்த வேண்டும் என்று வென்சியாபாவ் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் சீனாவும் முக்கிய அண்டை நாடுகளாகும். விரைவாக வளரும் பொருளாதார நாடுகளாகவும் திகழ்கின்றன. இருதரப்பு மற்றும் பல தரப்புத் துறைகளில் இரு நாடுகளுக்குப் பரந்த பொது நலன் உண்டு. சீனாவுடன் உயர் நிலை பரிமாற்றத்தையும் அரசியல் பேச்சுவார்த்தையையும் நிலைநிறுத்தி பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பை விரிவாக்க இந்தியா விரும்புகின்றது.
இரு நாட்டுறவை அமைதி மற்றும் செழுமை வாய்ந்த நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவு என்ற இலக்கை நோக்கி முன்னேறச் செய்ய வேண்டும் என்று பிரதிபா தேவிசிங் பாட்டில் அம்மையார் சந்திப்பில் தெரிவித்தார்.