சீன அரசுத் தலைவர் ஹூச்சிந்தாவ் சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அரசுத் தலைவர் Pratibha Patil அம்மையாருடன் 27ம் நாள் பெய்சிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சீன-இந்திய தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 60ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்திய அரசுத் தலைவர் Pratibha Patil சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்வதற்கு சீன அரசு மற்றும் மக்களின் சார்பில் ஹூச்சிந்தாவ் முதலில் வரவேற்பு தெரிவித்தார். பதவி ஏற்ற பின், சீனாவுடன் உறவை வளர்பப்தில் அரசுத் தலைவர் Pratibha Patil எப்போதும் கவனம் செலுத்துகின்றார் என்று ஹூச்சிந்தாவ் தெரிவித்தார்.
அழகிய சீனாவுக்கு வந்து அரசு முறைப் பயணம் மேற்கொள்வதில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக Pratibha Patil அம்மையார் தெரிவித்தார். 2010ஆம் ஆண்டு இந்திய-சீன தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 60ஆம் ஆண்டாகும் என்றும், இந்திய-சீன பாரம்பரிய நட்புறவுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிப்பதை தமது சீனப் பயணம் எடுத்துக்காட்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.